சர்காரில் ஏன் இலவச தொலைக்காட்சியை எரிக்கவில்லை? டிடிவி தினகரன் கேள்வி

 

சர்காரில் ஏன் இலவச தொலைக்காட்சியை எரிக்கவில்லை? டிடிவி தினகரன் கேள்வி

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசினார்.

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசினார்.

அப்போது சர்கார் திரைப்படம் தொடர்பான சர்ச்சை குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “சர்கார் திரைப்படம் நடுநிலையாக எடுக்கப்படவில்லை. இலவச தொலைக்காட்சியை எரிக்காமல் குறிப்பிட்ட சில திட்டங்களை மட்டும் விமர்சித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

அதேபோல், இந்த விவகாரத்தை ஆளும் கட்சியும் முறையாக அணுகவில்லை. மக்களை திசை திருப்பும் நோக்கில் ஆளும் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஆளுங்கட்சியினர் ஏன் போராடவில்லை?” என பதிலளித்தார்.

மேலும், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவு சரியானது என்றும் இடைத்தேர்தலை சந்திப்பது சரி தான் என சசிகலா கூறியதாக தினகரன் தெரிவித்துள்ளார்.