சரவணா ஸ்டோரில் பிக் பாக்கெட் அடித்த இளம்பெண்.. கையும் களவுமாகப் பிடித்த ஊழியர்கள் !

 

சரவணா ஸ்டோரில் பிக் பாக்கெட் அடித்த இளம்பெண்.. கையும் களவுமாகப் பிடித்த ஊழியர்கள் !

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த யமுனா(40) என்ற பெண் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர் கடைக்கு துணி வாங்குவதற்காக நேற்று சென்றுள்ளார்.

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த யமுனா(40) என்ற பெண் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர் கடைக்கு துணி வாங்குவதற்காக நேற்று சென்றுள்ளார். இவர் துணி எடுத்துமுடித்து விட்டு பில் போடுவதற்காக வரிசையில் நின்றுள்ளார். அப்போது தனது பையிலிருந்து பணம் எடுக்க முயன்ற யமுனா, பர்ஸ் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து சரவணா ஸ்டோர் மேலாளரிடம் தகவல் கொடுத்துள்ளார். 

ttnn

இதனையடுத்து, மேலாளர் சிசிடிவி கேமராக்களின் பதிவை சோதித்து பார்த்த போது இளம் பெண் ஒருவர் யமுனாவின் பையிலிருந்து பர்ஸை திருடியது தெரிய வந்துள்ளது. யமுனாவின் பர்ஸை திருடிய அந்த பெண் கடையை விட்டு வெளியே செல்லாமல் கடைக்குள்ளேயே சுற்றித் திரிந்துள்ளார். கடையின் மேலாளர் இந்த திருட்டு குறித்து அனைத்து ஊழியர்களுக்கும் தகவல் கொடுக்கவே, கடையில் சுற்றிக் கொண்டிருந்த அந்த பெண்ணை கையும் களவு மாக பிடித்துள்ளனர். இதனிடையே யமுனா, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ttn

அந்த பெண்ணை பிடித்த ஊழியர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் அந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் வியாசர்பாடியை சேர்ந்த திவ்யா(22) என்றும் அவர் தான் யமுனாவிடம் இருந்து பணத்தைத் திருடியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர், கொள்ளையடித்த 2,770 ரூபாயை பறிமுதல் செய்த காவல்துறையினர் திவ்யாவிடம் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.