சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸுக்கு சீல்! கோவை மாநகராட்சி அதிரடி!

 

சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸுக்கு சீல்! கோவை மாநகராட்சி அதிரடி!

கோவை ஒப்பனக்கார தெருவில் புதிதாகத் திறக்கப்பட்ட சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸுக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர்.

கோவை: கோவை ஒப்பனக்கார தெருவில் புதிதாகத் திறக்கப்பட்ட சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸுக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர்.

சரவணா ஸ்டோர்ஸ் புதிய கிளை தொடங்கும் போதெல்லாம் விதிமுறைகள் மீறப்படுவதாக புகார்கள் வருவதும் அதிகாரிகள் அவசர நடவடிக்கை நாடகமாடுவதும்,பிறகு சில நாட்களிலேயே மீண்டும் கடை திறக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டு இருப்பதுதான்.

madurai

கடைசியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில்,கட்டி முடிக்கும் முன்பே,போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு சரவணா ஸ்டோர்சஸின் திருநெல்வேலி கிளைக்கு சீல் வைக்கப்பட்டது.

 

saravaana

அதைத்தொடர்ந்து,கோவை ஒப்பனக்காரத் தெருவில் இயங்கி வந்த சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் கட்டிடத்தில், மாநகராட்சியின் கட்டிட விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ,டவுன் பிளானிங் அதிகாரிகள் இன்று காலை கடைக்கு சீல்வைத்தனர்.