சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்!

 

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்!

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வருகிறார்.

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வருகிறார். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9 ம் தேதி நீதிபதியின் முன் அவர் ஆஜராகினார். உடல்நிலை பதிக்கப்பட்டிருந்ததால் தனியார் மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாகதான் வந்தார். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சிறைக்கு செல்லும் போதே அவருடைய உடல்நிலை பாதிக்கபட்டிருந்தது. 

அதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் ராஜகோபால் அனுமதிப்பட்டார். உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதயம், நுரையீரல், சிறுநீரகம் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் இருப்பதால் அந்தந்த பிரிவு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 
           
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. உடனடியாக வெண்ட்டிலேட்டர் இயந்திரம் மூலம் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. மேலும் அவரது உடல் மருத்துவ இயந்திரங்கள் உதவியுடன் இயங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ராஜகோபால் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவருடைய மகன் சரவணன், உறவினர்கள், நண்பர்கள், சரவணபவன் ஊழியர்கள் நேற்று இரவு முதல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வர தொடங்கினர். இரவு 3 மணிக்கு மேல் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக அவருடைய உறவினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து வெண்ட்டிலேட்டரில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் நிலையில் அவரது உடல் நிலை கவலைகிடமாகவே உள்ளது. வெண்டிட்லேட்டரில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே ராஜகோபாலின் உடல் நிலை குறித்து முழுமையான நிலை தெரியவரும் என ஸ்டான்லி ஆஸ்பத்திரி மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.