சரத்பவாரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

 

சரத்பவாரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார்.

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா வரும் 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சிலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் திறக்கப்பட இருக்கிறது. மேலும், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். விழாவிற்கான அழைப்பிதழை நேற்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து ஸ்டாலின் வழங்கினார். அத்துடன் டெல்லியில் இன்று நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

இந்நிலையில், இன்று காலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, சென்னையில் நடைபெறும் அண்ணா, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்து அதற்கான அழைப்பிதழை வழங்கினார். இந்த சந்திப்பின் போது திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உடனிருந்தார்.