சரக்க வாங்கு தண்ணீர் பந்தலுக்கு வண்டியவிடு; டம்ளர் திருடும் போலீஸார்?!…

 

சரக்க வாங்கு தண்ணீர் பந்தலுக்கு வண்டியவிடு; டம்ளர் திருடும் போலீஸார்?!…

அறந்தாங்கி அருகே இளைஞர்களால் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த டம்ளர் தொடர்ந்து காணாமல் போயிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டுள்ள டம்ளரை போலீஸார் திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ssjdfjhdv

அறந்தாங்கி அருகே இளைஞர்களால் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த டம்ளர் தொடர்ந்து காணாமல் போயிருக்கிறது. இந்நிலையில் திருட்டை தடுப்பதற்காக அந்த பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சியில் இரு காவலர்கள் இரவு நேரம் சரக்கடிக்க அந்த கிளாஸை திருடிச் செல்வது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் காவல்துறையினர் நடத்திய வன்முறையால் மக்கள் அதிருப்தியில் இருக்கும் வேளையில், இதுபோன்ற மட்டமான செயல் காவல்துறையின் மீதுள்ள அதிருப்தியை அதிகரிப்பதாக உள்ளது.

sggg

இந்த திருட்டில் தொடர்புடைய கீரமங்கலம் போலீஸார் அய்யப்பன் மற்றும் வடிவழகன் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.