சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரித்துள்ளது: நிதியமைச்சர் அருண் ஜெட்லி

 

சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரித்துள்ளது: நிதியமைச்சர் அருண் ஜெட்லி

கடந்த ஆண்டைவிட நடப்பு நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

டெல்லி: கடந்த ஆண்டைவிட நடப்பு நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரித்துள்ளது.  ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 18 மாதங்களில்  மாநிலங்களின் வருவாய் இழப்பு  பெருமளவு குறைந்திருக்கிறது. இலக்கை எட்டாத  மாநிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீடு, முதல் ஆண்டைவிட  இரண்டாவது ஆண்டில் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்திய பிறகு முற்றிலும் நிலைமை மாறிவிட்டது.  அனைத்து வரிகளையும் ஒன்றிணைத்து  இந்தியா முழுவதும் ஒரு நாடு ஒரு வரி என்று கொண்டுவரப்பட்டது.

ஜிஎஸ்டி வருவாயை பொறுத்தவரையில் 2017-ம் ஆண்டில், சராசரி வரி வருவாய்  ஒரு மாதத்துக்கு ரூ 89,700 கோடி இருந்தது. நடப்பாண்டில் இது ரூ 97,100 கோடியாக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார்.