சரக்கு கிடைக்கவில்லை, பெட்ரோல் பங்க் நோக்கி படையெடுத்த குடிமகன்கள்- சென்னையில் நடந்த சுவாரசியம்!

 

சரக்கு கிடைக்கவில்லை, பெட்ரோல் பங்க் நோக்கி படையெடுத்த குடிமகன்கள்- சென்னையில் நடந்த சுவாரசியம்!

கொரோனாவால் பாதித்தோர்கள் கூட இந்தளவிற்கு வேதனை அடைந்திருக்கமாட்டார்கள். ஆனால் கொரோனாவால் குடிமகன்கள் படும் துயரம் சொல்லி மாளாது. இதனால் நாட்டின் பல இடங்களில் கள்ளச்சாராயத் தொழில் கொடிகட்டி பறக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனாவால் பாதித்தோர்கள் கூட இந்தளவிற்கு வேதனை அடைந்திருக்கமாட்டார்கள். ஆனால் கொரோனாவால் குடிமகன்கள் படும் துயரம் சொல்லி மாளாது. இதனால் நாட்டின் பல இடங்களில் கள்ளச்சாராயத் தொழில் கொடிகட்டி பறக்கத் தொடங்கியுள்ளது. பல குடிமகன்கள் தற்சார்பு வாழ்க்கையை நாடியுள்ளனர். ஆம், தங்களுக்கு தேவையான மதுவை தாங்களே தயார் செய்யும் அளவிற்கு வல்லுநர் ஆகிவருகின்றனர்.

crowd-gathered

மே 7-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது, ன்=இந்நிலையில், சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஸ்வீட் பீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. பீரின் மணமும், சுவையும் ஸ்வீட் பீரில் இருந்தாலும் அதனால் போதை ஏற்படாது. இருப்பினும் அந்த பெட்ரோல் பங்கில் குவிந்து வரும் மது பிரியர்கள் பெட்டி பெட்டியாக ஸ்வீட் பீரை வாங்கிச் செல்கின்றனர். ஸ்வீட் பீர் என்பது ஆல்கஹால் கலக்கப்படாதது. டாஸ்மாக் பீருக்கு மாற்று இது இல்லை என்றாலும் கூட சிலர் வாங்கிச் செல்கின்றனர். இப்படியே போனால் பலர் தங்கள் கஞ்சா தோட்டம் வளர்ப்பதையும் பார்க்கலாம் போல!