சயான், மனோஜ் கடத்தல்? – டெல்லியில் பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

 

சயான், மனோஜ் கடத்தல்? – டெல்லியில் பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

சயான், மனோஜ் இருவரையும் சென்னை போலீசார் கைது செய்யவில்லை என்றும், இருவரையும் கடத்திச் சென்றுவிட்டதாகவும் பத்திரிகையாளர் மேத்யூ அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி: சயான், மனோஜ் இருவரையும் சென்னை போலீசார் கைது செய்யவில்லை என்றும், இருவரையும் கடத்திச் சென்றுவிட்டதாகவும் பத்திரிகையாளர் மேத்யூ அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். 

kodanad

இந்த மர்ம மரணங்களுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேலிடம் வழக்கின் முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்திருந்தார். 

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மேத்யூ, சயான், மனோஜ் ஆகியோரை கைது செய்ய சென்னை போலீஸ் டெல்லி விரைந்தது. 

இந்நிலையில், பத்திரிகையாளர் மேத்யூ தற்போது அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சற்றுமுன்பு வரை சயான், மனோஜ் இருவரும் தன்னுடன் இருந்ததாகவும், அப்போது போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருந்த காரில் வந்த சிலர் இருவரையும் கைது செய்யாமல், கடத்திச் சென்றதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் தமிழக முதல்வர் பழனிசாமியின் ஆட்கள் என்றும், இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறியுள்ளார்.