சம்பள பாக்கியை வாங்க மறுத்த சாய் பல்லவி: குவியும் பாராட்டுக்கள்!

 

சம்பள பாக்கியை வாங்க மறுத்த சாய் பல்லவி: குவியும் பாராட்டுக்கள்!

நடிகை சாய் பல்லவி தான் நடித்த படம் வசூலில் தோல்வியை தழுவியதால் சம்பள பாக்கியை வாங்க மறுத்துள்ளார்

சென்னை: நடிகை சாய் பல்லவி தான் நடித்த படம் வசூலில் தோல்வியை தழுவியதால் சம்பள பாக்கியை வாங்க மறுத்துள்ளார். 

மலையாள படமான பிரேமம் மூலம் அறிமுகமாகி அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் சாய் பல்லவி. மலர் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல படங்களில்கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி 2 திரைப்படம் அனைவரும் ரசிக்கும் படியாக அமைந்து இருந்தது. 

இந்நிலையில் மாரி 2 திரைப்படம் ரசிக்கும் படி அமைந்து இருந்தாலும் வசூல் ரீதியில் தோல்வி அடைந்துள்ளது. தமிழில் வெளியான அதேநாளில் தெலுங்கில் வெளியான இந்தப் படம் ரூ.22 கோடிக்கு வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ரூ.8 கோடி மட்டுமே வசூல் செய்ததாக தெரிய வருகிறது. 

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த சாய் பல்லவியிடம் சம்பளத்தில் ஒரு பகுதியை முதலில் கொடுத்த தயாரிப்பாளர், மீதமுள்ள ரூ.40 லட்சம் பணத்தை ரிலீசுக்குப் பிறகு தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். 

இதையடுத்து சாய்பல்லவியை, சந்தித்து தயாரிப்பாளர் மீதி பணத்தை கொடுக்க சென்ற பொது அவர், அதை வாங்க மறுத்துள்ளார்.”படம் எதிர்பார்த்த அளவுக்குச் செல்லவில்லை,அதனால் இதை வாங்க என் மனம் ஏற்கவில்லை என்று பெருந்தன்மையோடு கூறியுள்ளார். 

saipallavi

என்னினும் அவர் பணத்தை வாங்க மறுத்தாலும்,அதை அவரின் பெற்றோர்களிடம் ஒப்படைக்க முயன்றனர், அதற்கு அவர்கள் கூறியதாவது,” எந்த விஷியத்திலும் எங்கள் மகளுடைய எண்ணங்களுக்கு ; சிந்தனைக்கு எதிராக நாங்கள் செல்ல மாட்டோம், அவர் எது செய்தலும் சரியாகத்தான் இருக்கும் என்று கூறினார். 

இந்நிலையில் வசூலில் நஷ்டம் ஏற்பட்டாலும், தானும் பொறுப்பேற்பதாக சாய் பல்லவி தயாரிப்பாளரிடம் கூறிய சம்பவம், திரைத்துறையினர் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.