” சம்பளத்தை குறைத்து கொள்ள தயார்” : தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வந்த நடிகர் மகத்

 

” சம்பளத்தை குறைத்து கொள்ள தயார்” : தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வந்த நடிகர் மகத்

தங்கள் சம்பளத்தை குறைத்து கொள்வதாகவும், சிலரோ புதிதாக நடிக்கும் படங்களுக்கு சம்பளம் வேண்டாம் என்றும் அறிவித்துள்ளனர். 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் தியேட்டர்கள், மால்கள் போன்ற  கேளிக்கை பொழுதுபோக்கு இடங்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரைத்துறை முற்றிலும் முடங்கி போயுள்ளது. இதனால் சமீபத்தில் இயக்குநர் ஹரி, நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண், அருள்தாஸ், ஆர்த்தி போன்றவர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்து கொள்வதாகவும், சிலரோ புதிதாக நடிக்கும் படங்களுக்கு சம்பளம் வேண்டாம் என்றும் அறிவித்துள்ளனர். 

rr

இந்நிலையில் நடிகர் மகத் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில்  தனது சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.  இதுகுறித்து கூறியுள்ள அவர், “இன்றைக்கு சமூகமும் சினிமாவும் இருக்கும் சூழலில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண் போன்ற நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. நானும் கடந்த பத்து வருடங்களாக இந்த திரையுலகில் இருந்து வருகிறேன்.. சில படங்களில் நடித்துள்ளேன்.. இன்னும் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என ஆசைப்படுகிறேன்.. 

இப்போதுதான் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக நிலவி வரும் இந்த ஊரடங்கு சூழலில் சினிமா தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது நம்மை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தான்.. திரைப்பட விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கூட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்..

ttt

இந்த மூன்று தரப்பினரும் சேர்ந்து முடிவெடுத்து, எங்களுக்கு இவ்வளதான் தான் கட்டுப்படியாகும், உங்களுக்கு இவ்வளதான் சம்பளம் கொடுக்க முடியும் என அறிக்கை வெளியிட்டார்கள் என்றால் அதற்கு ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன்..

பத்து பெர்செண்ட்  இருபது பெர்செண்ட்குறைத்தாலும் பத்தாது. ஏனெனில் திரையரங்குகளுக்கு மக்கள் வர நாட்களாகும். பாதிக்கு மேலான சுமை தயாரிப்பாளர்களுக்கு இருக்கு. எப்படி போட்ட பணத்தை எடுக்கப் போகிறார்கள் என்பதே பெருங்கேள்வியாக உள்ளது. இந்த சமயத்தில் சக கலைஞர்கள் பாதியளவாவது விட்டுக் கொடுக்க முன்வந்தால் நல்லது. 

ff

 என்னைப் பொருத்தவரையில் அது எத்தனை சதவீதமாக இருந்தாலும் குறைத்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்… என்னைப்போல வளர்ந்துவரும் நிறைய நடிகர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்.. என்றுமே ஒரு நடிகனுக்கு சம்பளத்தையும் தாண்டி நிறைய படங்கள் பண்ணனும், நிறைய கேரக்டர்களில் நடிக்கணும் ரசிகர்களை இன்னும் மகிழ்விக்கணும் என்பது தான் ஆசையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

நடிகர் மகத் வல்லவன், மங்காத்தா, சென்னை-28 2 உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நிலையில் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானது குறிப்பிடத்தக்கது.