“சம்சாரம்னா சம்பாதிச்சும் போடணும் ,சமைச்சும் போடணும்”-அடிமை வேலைக்கு போக மறுத்த பெண்ணுக்கு அடி உதை .. 

 

“சம்சாரம்னா சம்பாதிச்சும் போடணும் ,சமைச்சும் போடணும்”-அடிமை வேலைக்கு போக மறுத்த பெண்ணுக்கு அடி உதை .. 

மத்திய பிரதேசத்தின் தார் நகரில் அடிமை தொழிலாளியாக வேலை செய்ய மறுத்த ஒரு பெண்னை  அவரது குடும்ப உறுப்பினர்கள் கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது, ஆனால் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிய பின்னர் இது வெளிச்சத்திற்கு வந்தது.

மத்திய பிரதேசத்தின் தார் நகரில் அடிமை தொழிலாளியாக வேலை செய்ய மறுத்த ஒரு பெண்னை  அவரது குடும்ப உறுப்பினர்கள் கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது, ஆனால் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிய பின்னர் இது வெளிச்சத்திற்கு வந்தது.

“ஒரு பெண் நான்கு நபர்களால் தாக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமீபத்தில் சமுக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இது நால்ச்சா காவல் நிலையத்தின் கீழ் உள்ள பில் தல்வாடா கிராமத்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த வீடியோ வெளிவந்தது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர் .

madhya pradesh

“ஒரு பெண்ணை அடித்துக்கொண்டிருக்கும் நான்கு நபர்கள் அவளுடைய தந்தை, தாய், மாமா மற்றும் ஒரு கிராமவாசி என்பது எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவர்கள் குஜராத்திற்குச் சென்றார்கள். அவர் அங்கு அடிமை தொழிலாளியாக  வேலை செய்ய விரும்பாததால் குஜராத்தில் இருந்து திரும்பினார். இந்த பிரச்சினையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை அடித்து உதைத்தனர், “என்று போலீசார்  கூறினார்கள் .
தாக்கிய நபர்கள் மீது விசாரணை நடந்து வருவதாகவும், இந்த வழக்கில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.