சமையல் அறைக்குள் புகுந்த மைனா! தலைகீழாக கட்டித் தொங்கவிட்ட கோபக்கார பெண்!!

 

சமையல் அறைக்குள் புகுந்த மைனா! தலைகீழாக கட்டித் தொங்கவிட்ட கோபக்கார பெண்!!

சிங்கப்பூரில் உள்ள இஷுன் பகுதியிலுள்ள வீட்டுக்கு வெளியே உள்ள ஜன்னலில் மைனா ஒன்று தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

சிங்கப்பூரில் உள்ள இஷுன் பகுதியிலுள்ள வீட்டுக்கு வெளியே உள்ள ஜன்னலில் மைனா ஒன்று தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இஷின் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் புகுந்த மைனா ஒன்று அங்கு வசிக்கும் பெண்ணின் சமையல் அறைக்குள் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மைனாவை பிடித்து அவரது வீட்டின் ஜன்னலில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டார். 

 

இதனை கண்ட அப்பகுதிவாசிகள் விலங்கு நல ஆராய்ச்சி மற்றும் சங்கத்திற்கு தெரியப்படுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் மைனாவை மீட்டு அதற்கு உணவும், நீரும் அளித்தனர். அதன்பின் அவர்கள் நடத்திய விசாரணையில், மைனா சமையல் அறைக்குள் வந்து தொந்தரவு செய்ததாகவும், அதற்கும், மற்ற பறவைகளுக்கும் பாடம் புகட்டவே துணியை காய வைக்கும் கொடியில் மைனாவை கட்டி தொங்கவிட்டென் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.