சமூக விலகலை கடைபிடிக்காமல் சந்தையில் குவிந்த மக்கள்.. மாவட்ட கலெக்டரின் அதிரடி நடவடிக்கை!

 

சமூக விலகலை கடைபிடிக்காமல் சந்தையில் குவிந்த மக்கள்.. மாவட்ட கலெக்டரின் அதிரடி நடவடிக்கை!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, மீண்டும் அவர்கள் வெளியே வராமல் தடுத்து வருகின்றனர். இருப்பினும் மக்கள், கொரோனா வைரஸின் அபாயம் புரியாமல் வெளியே சுற்றித் திரிந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக காய்கறி கடைகளிலும், சந்தைகளிலும் மக்கள் அதிகமாக கூடுகின்றனர். 

ttn

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், பேருந்து நிலையம் அருகே உள்ள சந்தையில் மக்கள் அதிகமாக இருப்பதாக மாவட்ட கலெக்டர் பிரபாகருக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு சென்ற கலெக்டர் மக்கள் சமூக விலகலை  கடைபிடிக்காமல் இருப்பதை பார்த்துள்ளார். அதனையடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர், அந்த சந்தையை மூட உத்தரவிட்டுள்ளார். மேலும், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.