சமூக சேவைக்காக ஜீ.வி.பிரகாஷ் தொடங்கிய புதிய செயல்: குவியும் பாராட்டுக்கள் 

 

சமூக சேவைக்காக ஜீ.வி.பிரகாஷ் தொடங்கிய புதிய செயல்: குவியும் பாராட்டுக்கள் 

சமூக சேவைக்காக ஜீ.வி.பிரகாஷ் புதிய யூ டியூப் சேனல் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். 

சென்னை: சமூக சேவைக்காக ஜீ.வி.பிரகாஷ் புதிய யூ டியூப் சேனல் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். 

இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வளம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது சசி இயக்கத்தில் உருவாகிவரும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சூர்யா, தனுஷ் நடிக்கும் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். ஜீ.வி.பிரகாஷ் நடிப்பையும் தாண்டி பல சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். ‘மகத்தான மாமனிதர்கள்’ என்ற பெயரில் தொடங்கும் இந்த சேனலில் சத்தமின்றி பல நல்ல விஷயங்களை சமுதாயத்திற்கு செய்துவிட்டு அமைதியாக இருப்பவர்களிடம் பேட்டி எடுத்து அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர ஜிவி முடிவு செய்துள்ளார். 

gv

இது பற்றி அவர் பேசுகையில், ‘சினிமா துறை என்பது டாக்டர், வக்கீல் போன்ற ஒரு தொழில் அவ்வளவு தான். நாங்களும் சாதாரண மனிதர்கள் தான். பயணம் எங்கு தொடங்கிறதோ, புதிய கனவுகள் அங்கு மலரும், அந்த பயணத்தின் தொடர்ச்சியாகத் தான் இசை. இசைக்கு பின்பு நடிப்பு. தற்போது சமூக பணி. நான் இசை அமைத்த போதிலும், நடித்த போதிலும் கிடைக்காத சந்தோஷம் சமூக சார்ந்த வேலைகள் செய்யும் போது மனதிற்கு மிகவும் ஆனந்ததை  கொடுக்கிறது. என் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வேண்டும், அதற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். அது என் கடமையும் கூட. என் பயணத்தின் அனுபங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை, தமிழகத்தில் இன்னும் மழை பெய்து கொண்டு இருக்கிறது என்றால் நான் சந்தித்த, சந்திக்காத மாமனிதர்களால் தான் என்று சொன்னால் மிகையாகாது. நான் பார்த்த சமூக பணி செய்யும் மனிதர்கள் மிகவும் சாதாரணமாக மிகப் பெரிய சமூக சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு அதற்கான தீர்வுகளை கண்டு உள்ளார்கள்.

gv

அதற்காக உலக அளவில் பெரிய விருதுகள் கூட பெற்று கொண்டு இன்னும் மக்களுடன் மக்களாக சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவை அனைத்தும் செய்தும் மிகவும் தன்னடக்கத்துடன் இருக்கிறார்கள். நான் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்காக என் முகம் வெளியே தெரிகிறது. அதுவும் ஒரு வகையில் நன்மை தான் என்று நான் எண்ணுகிறேன், காரணம் என் மூலம் இந்த மாமனிதர்களை வெளியே கொண்டு வந்து மக்களுக்கு காட்ட விரும்புகிறேன். வெளிச்சத்துக்கு வராமல் அதே நேரத்தில் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர்களை நானே நேரடியாக அவர்கள் இடத்துக்கு சென்று பேட்டி எடுத்து வெளி உலகத்துக்குக் காட்ட உள்ளேன். 

gv

‘மகத்தான மாமனிதர்கள்’ என்ற பெயரில் என்னுடைய யூடியூப் சேனலில் இது ஒளிபரப்பாகும். சுதந்திரமாக இந்த நிகழ்ச்சி அமையவேண்டும் என்பதற்காக லாப நோக்கு துளிகூட இல்லாமல் யூடியூபில் வெளியிடுகிறேன்.  சமூக பணி பல துறைகளில் இருக்கிறது, என்னால் எல்லா துறைகளிலும் சென்று உதவ முடியாது. ஆனால் பல துறைகளில் சிறப்பாக செயல்படும் மனிதர்களுடன் சேர்ந்து பயணிக்க முடிவு செய்தேன். அது போல நான் சமூகத்தில் சந்திக்கும் மகத்தான மனிதர்களை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் அவர்கள் செய்யும் மக்கள் நலப்பணிகள், சாதனைகள் என்று அவர்கள் இடத்திற்கே சென்று களத்தில் நான் பார்த்து தெரிந்து கொண்ட அனுபவங்களின் தொகுப்பாகத் தான் இந்த ‘மகத்தான மாமனிதர்கள்’ என்று கூறியுள்ளார். இவரின் இந்த புதிய முயற்சிக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.