சமூக ஊடகத்தில் சர்ச்சை -குடியுரிமை சட்டத்தை எதிர்த்த பெண் -அந்தரங்கத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டும் ஆண்…
CAA சட்டத்தால் டெல்லியில் நடந்த வகுப்புவாத கலவரங்களுக்கு 45 க்கும் மேற்பட்டோர் இறந்து ,நூற்றுக்கணக்கான பேர் காயமடைந்த பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் சமூக ஊடகத்தில் புகைந்து கொண்டிருக்கிறது .
CAA சட்டத்தால் டெல்லியில் நடந்த வகுப்புவாத கலவரங்களுக்கு 45 க்கும் மேற்பட்டோர் இறந்து ,நூற்றுக்கணக்கான பேர் காயமடைந்த பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் சமூக ஊடகத்தில் புகைந்து கொண்டிருக்கிறது .
துபாயைச் சேர்ந்த இந்திய சமையல்காரர் CAA வை எதிர்க்கும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் அவரது அந்தரங்க உறுப்பில் ஆசிட் வீசுவதாகவும் , இது போல அவருக்கு எதிராக பல ஆபாசமான கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் அவரை உடனடியாக கைது செய்யுமாறு நூற்றுக்கணக்கான மக்கள் கோரியுள்ளனர்.
ஐக்கிய அரபி நாட்டில் சமையக்காரராக பணிபுரியும் திரிலோக் சிங் என்பவர் ,குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் சுவாதி கன்னா என்ற இந்தியபெண்ணை சமூக ஊடகத்தில், அவர் ஒரு விபச்சாரி என்றும், அவர் டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவார் என்றும்,மிரட்டியுள்ளார்.
Namaskar ! We recently noticed a series of tweets about Trilok Singh. We strongly condemn this behavior and clarify that Trilok Singh is not a part of @thelalitgroup since last two years.
We are also reporting his profile to Facebook for removing his current working status.
— The Lalit Hotels (@TheLalitGroup) March 1, 2020
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான விமர்சனத்துக்காகவும், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்புக்காகவும் இந்தி மொழியில் கன்னாவுக்கு எதிராக சிங் ஒரு வெளிப்படையான கருத்துக்களை எழுதியுள்ளார் , மேலும் அவர் அந்தப் பெண்ணைப் பற்றி இந்தியாவில் சாப்பிடுகிறார், பாகிஸ்தானுக்காக பாடுகிறார் என்று அவர் கூறியுள்ளார் .