சமந்தா,ஹன்சிகாவை தொடர்ந்து சமூக சேவையில் இறங்கிய காஜல் அகர்வால்!

 

சமந்தா,ஹன்சிகாவை தொடர்ந்து சமூக சேவையில் இறங்கிய காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் அரக்கு பகுதியில் உள்ள குழந்தைகளுக்குப் இலவசமாக பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்துள்ளார்.

சென்னை: நடிகை காஜல் அகர்வால் அரக்கு பகுதியில் உள்ள குழந்தைகளுக்குப் இலவசமாக பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்துள்ளார். 

தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடிப்பில் சமீபத்தில் உருவாகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் டீஸர் வெளியாகி வைரலானது. அதையடுத்து தற்போது கமல் ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.   

kajal

இந்நிலையில் காஜல் படம் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையில் ஈடுபடுவதாகச் செய்திகள் வெளியானது.  அதுபற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, ‘சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறேன். அதற்கு என் பணத்தை செலவிடுகிறேன். ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதைப் பார்த்தேன். இதனால் நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். 

kajal

ஏற்கனவே சமந்தா பெண்களுக்கான அமைப்பு நடத்தி வருகிறார். அதே போல் ஹன்சிகா 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த வரிசையில் நடிகை காஜல் அகர்வாலும் இணைந்துள்ளது அவர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .

இதையும் படிங்க: தர்ம பிரபு டீஸர்: அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா! தில்லாக செம கலாய் கலாய்க்கும் யோகி பாபு