சப்பாத்தி ஆசைகாட்டி குழந்தையை கடத்தினேன்: சிறுமி கடத்தல் வழக்கில் சிக்கிய பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!

 

சப்பாத்தி ஆசைகாட்டி குழந்தையை கடத்தினேன்: சிறுமி கடத்தல் வழக்கில் சிக்கிய பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!

தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இருவரையும் கைது செய்து குழந்தையை மீட்டனர். 

சென்னை :  4 வயது சிறுமியை கடத்தியது எப்படி என்று இளைஞரும் அவரது காதலியும் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த அருள்ராஜ். இவரது மனைவி நந்தினி. மருத்துவராக பணிபுரிந்து வரும் நந்தினியின் வீட்டில் வேலை  செய்து வந்த அம்பிகா என்ற பெண்ணும் அவரது காதலர் முகமது கலிமுல்லா இருவரும் சேர்ந்து நந்தினி – அருள்ராஜின் 4 வயது மகளை கடத்தியுள்ளனர். இது குறித்து அருள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,  தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இருவரையும் கைது செய்து குழந்தையை மீட்டனர். 

kalil

இந்நிலையில் குழந்தையைக் கடத்தியது எப்படி என  அம்பிகா வாக்குமூலம் அளித்துள்ளார். அதில்,  சிறுமிக்கு சப்பாத்தி என்றால் பிடிக்கும். அதனால் வீட்டில் சப்பாத்தி செய்யவில்லை. வெளியில் சென்று சாப்பிடலாம் ஏ என்று கூறி அழைத்து சென்று கடத்தினோம். என் காதலர்  கலிமுல்லா யூட்யூப் பார்த்துத் தான் கடத்தல் எப்படி செய்வது என்பதை  கற்றுக்கொண்டார். அவர் ஓ காதலனே என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அந்த படம் சரியாக ஓடவில்லை. அதனால் நாமே படம் எடுத்து அதில் நடிக்கலாம் என்றார். எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்ததால், அதற்கு பணம் ஈட்ட இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டோம்’ என்று கூறியுள்ளார்.

police

குறிப்பாக கடத்தல் விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட இருவரும் உன்னால் தான் இப்படி ஆகிவிட்டது என்று மாறிமாறி குற்றச்சாட்டி  போலீசாருக்கு  முன்னிலையிலேயே  சண்டையிட்டுக்  கொண்டதாகக் கூறப்படுகிறது.