சபரிமலை விவகாரம்; பினராயி விஜயன் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு

 

சபரிமலை விவகாரம்; பினராயி விஜயன் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிந்து, கனகதுர்கா என்ற இரு பெண்கள் காவல்துறை பாதுகாப்புடன் சன்னிதானம் சென்று தரிசனம் செய்தனர். இதனால் கேரளாவில் போராட்டம் நடந்துள்ளது. ஆனால் இந்த போராட்டம் கலவரமாகவும் மாறி இருக்கிறது. மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் வாகனத்தை முற்றுகையிடவும் போராட்டக்காரர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயி என்ற இடத்தில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.