சபரிமலை விவகாரத்தில் நான் கருத்து கூற முடியாது: கமல் ஹாசன் பரபரப்பு பேட்டி!

 

சபரிமலை விவகாரத்தில் நான் கருத்து கூற முடியாது: கமல் ஹாசன் பரபரப்பு பேட்டி!

சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதிக்காததின் மூலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவே இல்லை என்பது உறுதியாகிறது  என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதிக்காததின் மூலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவே இல்லை என்பது உறுதியாகிறது  என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ‘காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்தெல்லாம் இப்போது எதுவும் சொல்லமுடியாது. வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் முடிவு செய்ய முடியும்’ என்று  தெரிவித்தார். 

சபரிமலை விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்குப் பதில் அளித்த அவர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவே இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதில் நான் எதுவும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.