சபரிமலையில் 2 பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்?

 

சபரிமலையில் 2 பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்?

சபரிமலையில் 2 பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவனந்தபுரம்: சபரிமலையில் 2 பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று திறக்கப்பட இருக்கிறது. இதனால் பெண்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக பலத்த காவல்துறை பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படியே இன்று ஆந்திராவை சேர்ந்த 3 பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். ஆனால் அவர்களை கோயிலுக்கு செல்லவிடாமல் பம்பையில்  ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் பெண் காவல்துறையினருக்கு எதிராகவும் அவர்கள் போராட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டம் நடத்திய 50 பேர் மீது கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

இந்நிலையில் சபரிமலை சென்ற இரு பெண் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சபரிமலை நிலக்கல் பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.