சபரிமலையில் 144 தடை! – மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

 

சபரிமலையில் 144 தடை! – மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

சபரிமலை சுற்று வட்டார பகுதிகளில் 144 உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பத்தனம்திட்டா: சபரிமலை சுற்று வட்டார பகுதிகளில் 144 உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது.

அந்த தீர்ப்புக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தீர்ப்புக்குப் பின் முதல் முறையாக ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டுள்ளது.

அங்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால், போலீசார் தடியடி, கைகலப்பு என அந்த இடமே போராட்ட களம் போல் காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், கலவரம் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக, பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை 144 தடை உத்தரவு அமல்செய்யப்படுவதாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.