சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

 

சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

சபரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை நீடித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

பத்தனம்திட்டா: சபரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை நீடித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, தற்போது சபரிமலை மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால், சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவானது இன்று நள்ளிரவு வரை இருந்த நிலையில், 144 தடையை நீட்டிக்கக் கேரள காவல்துறையினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் சபரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை வருகிற 30-ம் தேதி வரை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.