சபரிமலையில் மீண்டும் பதற்றம்: பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு!

 

சபரிமலையில் மீண்டும் பதற்றம்: பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு!

சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் 6-ம் தேதி வரை பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் 6-ம் தேதி வரை பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை  ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் கோர்ட் உத்தரவை அமல்படுத்த, கேரளா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையடுத்து ஐப்பசி பூஜைக்காக கடந்த அக்டோபர் 17-ம் தேதி கோயில் திறந்தபோது பெண்கள் பலர் கோயிலுக்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்குப் பதட்டம் ஏற்பட்டது. பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, பெண்கள் கோயிலுக்குள் செல்லாமல் திரும்பி வந்தனர். இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்க கோயிலை சுற்றியுள்ள பத்தனம்திட்டா, நிலக்கல், பம்பை, ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வரும் திங்கட்கிழமை, சிறப்பு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட உள்ளதால், இன்று (நவம்பர் 3) நள்ளிரவு முதல் 6-ம் தேதி வரை பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.