சபரிமலையில் மகரவிளக்கு பூஜை: ஜன15 மகரஜோதி; கோயில் நடை இன்று திறப்பு!

 

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை:  ஜன15 மகரஜோதி; கோயில் நடை இன்று திறப்பு!

இங்கு மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட ஐயப்பன் கோயில் நடை, கடந்த 27 ஆம் தேதி சாத்தப்பட்டது

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் இன்று மாலை  திறக்கப்படவுள்ளது. 

கேரளாவில் உலக பிரசித்தி பெற்ற  ஐயப்பன்  கோவில் அமைந்துள்ளது. இங்கு மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட ஐயப்பன் கோயில் நடை, கடந்த 27 ஆம் தேதி சாத்தப்பட்டது. 

ttn

இந்நிலையில்  வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறவுள்ள மகரவிளக்கு பூஜைக்காக, கோயில் நடை  இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 2020ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி மகர விளக்கன்று பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை தெரியும். இதைக் காண  லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வருவது வழக்கம். தற்போது மகரவிளக்கு பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுவதால் இன்றும்  மக்கள் கூட்டம் அலைமோதும்.  இதனால் சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ttn

மகரஜோதி முடிந்து வரும் ஜனவரி 20ஆம் தேதி இரவு 7 மணிக்கு மீண்டும்  ஐயப்பன் கோயில் சாத்தப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.