சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் வன்முறை வெடிக்கும்: தலைமை தந்திரி எச்சரிக்கை

 

சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் வன்முறை வெடிக்கும்: தலைமை தந்திரி எச்சரிக்கை

சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் வன்முறை வெடிக்கும் என தலைமை தந்திரி மகேஷ்வரரு எச்சரிக்கை விடுத்துள்ளார்

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் வன்முறை வெடிக்கும் என தலைமை தந்திரி மகேஷ்வரரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்துள்ள கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும், இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 16-ம் தேதி முதல் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

ஆனால், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து நாயர் சேவா சமூகத்தினர் மற்றும் தேசிய ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் வன்முறை வெடிக்கும் என தலைமை தந்திரி மகேஷ்வரரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேசமயம், இந்த விவகாரம் குறித்து பந்தளம் அரச குடும்பத்தினர், சபரிமலை தந்திரிகள், இந்து அமைப்பினர் உள்ளிட்டோருடன் திருவாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.