சபரிமலைக்கு விரதம் இருக்கும் பிக் பாஸ் காயத்ரி: ‘குடிக்காம போ’ என்று வம்பிழுத்த நெட்டிசன்கள்; உண்மை நிலவரம் என்ன?
பிக் பாஸ் போட்டியாளரும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் தான் 45 நாட்கள் சபரிமலைக்கு விரதம் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: பிக் பாஸ் போட்டியாளரும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் தான் 45 நாட்கள் சபரிமலைக்கு விரதம் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை காயத்ரி ரகுராம் சில நாட்களுக்கு முன்பு சென்னை அடையார் பகுதியில் மதுபோதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கியதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து காயத்ரி நான் மது அருந்தவில்லை. என்னுடைய லைசன்ஸ் வேறு ஹேண்ட்பேகில் இருந்ததால் காவலர் ஒருவர் என்னுடன் வந்தார். எதற்காக என்னைப் பற்றி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
My Ayyappa viradham starts from today sawmi charanam 45 days. Strength and peace. pic.twitter.com/b2Q2DAKgWy
— Gayathri Raguramm (@gayathriraguram) December 1, 2018
Second of all if I drink or eat or sleep or fart is non of anyone’s business. If I’m a kudikari it’s my problem my family knows and how to take care of it they know the truth about me and my friends too. take care of ur family and all those alcoholics in ur family. God bless.
— Gayathri Raguramm (@gayathriraguram) December 2, 2018
இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நான் 45 நாட்கள் சபரிமலைக்கு விரதம் இருக்கப்போகிறேன்’ என்று பதிவிட்டார். காயத்ரியின் இந்த பதிவை தொடர்ந்து அம்மா தாயே ஐயப்பன் கிட்ட போறப்பவாவது சரக்கடிக்காம போ என்று சிலர் வசைபாட தொடங்கினர். இதனால் கோபமடைந்த காயத்ரி ரகுராம், ‘நான் குடிக்கிறேன், சாப்பிடுறேன், படுக்கிறேன்ங்குறதெல்லாம் என்னோட பிரச்னை. தங்கள் சொந்த வீடுகளில் உள்ள குடிநோயாளிகளை முதலில் திருத்தப் பாருங்க. போய் அவனவன் வீட்டுப் பிரச்னையைப் பாருங்க’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
I’m just in viradham until magara Jyothi. I follow my mom side family tradition strictly. There is a limit for assumption and trolling me. Sometimes some people give baseless comments. I feel sorry for them. I’m not going to Sabarimala.
— Gayathri Raguramm (@gayathriraguram) December 2, 2018
தொடர்ந்து இது குறித்து பதிவிட்டுள்ள காயத்ரி, ‘நான் மகரஜோதிக்காகத் தான் விரதம் இருக்கிறேன். நான் என் அம்மாவுடைய குடும்ப பாரம்பரியத்தை கடைபிடிக்கிறேன்.எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது. சில நபர்களின் பதிவுகளில் அடிப்படையற்ற தன்மை நிலவுகிறது. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். நான் சபரிமலைக்கு செல்லவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.