சபரிமலைக்கு செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா கைது

 

சபரிமலைக்கு செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா கைது

சபரிமலை செல்ல முயன்ற சசர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமாவை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர்

திருவனந்தபுரம்: சபரிமலை செல்ல முயன்ற சசர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமாவை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த தீர்ப்பிற்குப் பின் பெண்களும்  கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், பெண்களை உள்ளே அனுமதிக்கத் தடை விதிக்கக் கோரி பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதையும் மீறி சபரிமலை செல்ல முயன்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அந்த வகையில், கொச்சியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா இரு முடியுடன் கோயிலுக்குள் செல்ல முயன்ற போது போராட்டக்கரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், பெண்ணியவாதி ரெஹானா பாத்திமாவை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக்கில் மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படம் பதிவிட்ட வழக்கில் ரெஹானா பாத்திமா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.