‘சன்னி லியோன் செய்த செயலால் என் நிம்மதியே போச்சு’: கதறும் டெல்லி வாலிபர்

 

‘சன்னி லியோன் செய்த செயலால் என் நிம்மதியே போச்சு’: கதறும் டெல்லி வாலிபர்

சன்னிலியோனால் தனது வாழ்க்கையின் நிம்மதியே போய்விட்டதாக டெல்லியில் ஒரு வாலிபர் புகார் அளித்துள்ளார். 

‘சன்னி லியோன் செய்த செயலால் என் நிம்மதியே போச்சு’: கதறும் டெல்லி வாலிபர்

டெல்லி : சன்னிலியோனால் தனது வாழ்க்கையின் நிம்மதியே போய்விட்டதாக டெல்லியில் ஒரு வாலிபர் புகார் அளித்துள்ளார். 

பாலிவுட்டின் பேபி டால் என்று அழைக்கப்படுபவர் நடிகை சன்னி லியோன். அடல்ட் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில்  ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘அர்ஜூன் பாட்டியாலா’ என்ற படம் வெளியானது. 

அப்போது அதில் ஒரு குறிப்பிட்ட சீன்னில் சன்னிலியோன் ஒரு மொபைல் எண்ணைத் தரும் காட்சி உள்ளது. அது  சன்னிலியோனின் மொபைல் எண் என தவறாக நினைத்து கொண்ட அவரது ரசிகர்கள் அந்த எண்ணுக்கு தினமும் தொடர்பு கொண்டு,சன்னிலியோனிடம் பேச வேண்டும் என்று நச்சரிக்கின்றார்களாம். இதனால் கடுப்பான அந்த வாலிபர் தனது மொபைல் எண்ணுக்குத் தினமும் நூற்றுக்கணக்கானோர் போன் செய்து சன்னிலியோன் குறித்து கேட்பதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சன்னி லியோன் செய்த செயலால் தனது நிம்மதி பறி போய்விட்டதாகவும் , ‘அர்ஜூன் பாட்டியாலா’ படக்குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். அதை ஏற்று கொண்ட போலீசார், படக்குழு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.