சன்னி லியோனின் பயோ பிக்கில் நடிக்க ஆசை – மீரா மிதுன்! 

 

சன்னி லியோனின் பயோ பிக்கில் நடிக்க ஆசை – மீரா மிதுன்! 

பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பண மோசடி புகார் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… லஞ்சம் வாங்குவது அதிகரித்துவிட்டது, காவல்துறையினர் உண்மைக்கு புறம்பாக நடந்துகொள்கின்றனர், சினிமாவில் ஆணாதிக்கம் அதிகரித்துவிட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

meera mithun

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் கசிகின்றன. அவ்வப்போது கவர்ச்சிப் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு முகம் சுழிக்க வைத்துவரும் மீரா தற்போதும் அதே போன்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு மீரா மிதுன் அளித்த பேட்டியில், “சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க எனக்கு ஆசை. சின்ன வயதில் தெரியாமல் செய்த தவறை மறந்து,  தற்போது தைரியமாக நடிகையாகி பல நல்ல விஷயங்களை செய்துவருகிறார். அவரே எனது ரோல்மாடல்” என தெரிவித்துள்ளார்.