சனிஸ்வரரின் கொடிய பார்வையிலிருந்து தப்ப சந்திரனுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

 

சனிஸ்வரரின் கொடிய பார்வையிலிருந்து தப்ப சந்திரனுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

ஜோதிடத்தில் சனியின் தாக்கத்தை குறைக்கும் சந்திரனுக்கு உரிய பரிகாரங்கள்.

ஒருவருக்கு கடக லக்னம் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அட்டமாதிபதியான சனிதசை நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

chandhran

அட்டமாதிபதி தசை நடப்பதால் அதுவும் சனி தசையாக இருப்பதால் வம்பு ,வழக்கு குடும்ப பிரிவினை, சிறைத்தண்டனை, விபத்து, மற்றும் அவர் எந்த வீட்டையெல்லாம் பாவத்தன்மை பெற்று பார்க்கிறாரோ அந்த வீட்டையெல்லாம் கெடுத்து அந்த பாவங்களின் மூலமாக துன்பத்தை அட்டமாதிபதியான சனி தருவார்.

இப்போ நீங்கள் அட்டமாதிபதியான சனிபகவானுக்கு பரிகாரம் செய்வீர்களா?
லக்னாதிபதியான சந்திரனுக்கு பரிகாரம் செய்வீர்களா? சனிக்கு பரிகாரம் செய்வீர்களேயானால் உங்களுக்கு கண்டிப்பாக பிரச்னைகள் குறையவே குறையாது. சனி இன்னும் அதிகமாக வலுத்து கெடுப்பார்.

chandhran

சனிக்கு பரிகாரம் பண்றது தப்பு. சனிய பாக்கறதே தப்பு. சனியின் பார்வையால் வினாயகருக்கு தலையே போயிருச்சு. ராவணணின் பலம் சனியின் பார்வையால் குறைந்து ராமரால் ராவணவதம் நிகழ ஏதுவாயிற்று. சனியின் பார்வை கொடியது.

சரி இப்ப உங்கள் லக்னாதிபதியை வலுப்படுத்தக்கூடிய பரிகாரங்களை செய்து கொள்ள வேண்டும்.லக்னாதிபதி சந்திரனின் நிறம் வெள்ளை. சந்திரனின் அதிதேவதை பராசக்தி. திங்கள்கிழமையில் சந்திர ஓரையில் ,சந்திர ஓரையானது காலையில் 6 to 7 ,மதியம் 1 to 2 , இரவு 8 to 9 இந்த நேரங்களில் வரும்.

ambaal

இந்த நேரத்தில் பராசக்திக்கு வெள்ளி நிறத்தில் பட்டு எடுத்து சாற்றவேண்டும். மூலஸ்தானம் அம்பாளாக இருக்கணும். அது ரொம்ப முக்கியம். உதாரணமாக பழனியில் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. மூலஸ்தானம் அந்த அம்பாள் தான்.

அந்த அம்பாளுக்கு வெள்ளை நிறத்தில் மல்லிகை பூ மாலை சாற்றலாம். அம்பாளுக்கு கல்கண்டு பொங்கல் படைக்கலாம். அவர் தித்திப்பு பிரியர் என்பதால் கல்கண்டு, வெள்ளை கலரில் ஸ்வீட்ஸ்கள் வாங்கி படைக்கலாம்.

இதனுடன் ஐந்து வகையான கனிவர்க்கங்களை சேர்த்து கொள்ளலாம். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, மாதுளம் பழம் போன்ற ஐந்து வகையான கனிவர்க்கங்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

siva

பராசக்திக்கு தாமரைநூலில் பசுமாட்டு நெய் கிடைத்தால் நெய்விளக்கு ஏற்றலாம்.சந்திரனுக்கு உரிய ஷேத்ரமான திருப்பதி அல்லது திங்களுருக்கு ஆறுமாதம்,ஒரு வருடத்துக்கு ஒருமுறை உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று சென்று வரலாம்.

உங்கள் லக்னாதிபதிக்குரிய முத்துவை மோதிரத்தில் பதித்து உங்கள் வலதுகை மோதிரவிரலில் அணிந்து கொள்ளலாம். இந்த லக்னாதிபதிக்குரிய கல்லை நீங்கள் ஆயுள் முழுவதும் எந்த தசாபுக்திகளிலும் அணியலாம். ராசிக்கல்லை லக்னத்துக்கு தேர்ந்தெடுத்து அணிவதே சிறப்பாக இருக்கும்.