சனாதன எதிர்ப்பு: திருமாவை நேரில் சென்று வாழ்த்திய பா. ரஞ்சித்

 

சனாதன எதிர்ப்பு: திருமாவை நேரில் சென்று வாழ்த்திய பா. ரஞ்சித்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்-ஐ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்-ஐ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.

மக்களவை தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் பிஸியாக உள்ளது. தேர்தல் பிரச்சாரம், வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைகள் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை வழங்கி வருகிறது. மோதிர சின்னம் கேட்ட விசிகவுக்கு பானை சின்னத்தை வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் விசிக தலைவர் திருமாவளவன். அதே அரசியலை தன் திரைப்படங்கள் வாயிலாக தொடர்ந்து பேசி வருபவர் இயக்குனர் பா. ரஞ்சித்.  விசிகவுக்கு பானை சின்னம் வழங்கப்பட்டதையொட்டி, திருமாவளவனை நேரில் சந்தித்து ரஞ்சித் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் உடன் இருந்தார்.

thiruma

ரஞ்சித் – திருமா தரப்பினர் இடையே சிறிய கருத்து வேறுபாடுகள் இருப்பினும், சனாதன எதிர்ப்பில் இவர்கள் இணைந்து செயல்படுகின்றனர். பானை சமூகநீதியின் சின்னம் என்ற முழக்கத்தோடு திருமா பரப்புரையை துவங்கியுள்ளார்.