சனம் ஷெட்டி விவகாரத்தில் தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்!?

 

சனம் ஷெட்டி விவகாரத்தில் தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்!?

அவரைப்பற்றிய பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது’  என்றார். கடந்த சில நாட்களாக மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வந்த இந்த விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்  தர்ஷன். இவர் மீது  மாடல் அழகியும்  தர்ஷனின் காதலியுமான  சனம் ஷெட்டி  நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தார். மேலும் நான் இதுவரை தர்ஷனுக்காக 15 லட்சம் ரூபாய்  வரை செலவு செய்துள்ளேன்  என்றும்  கூறினார் .

t

 இதற்கு விளக்கமளித்த தர்ஷன், ‘சனம்  ஷெட்டி மாஜி காதலருடன் ஒரே அறையில் தங்கினார். என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியது அவர்தான். அதற்கான ஆதாரம் மற்றும் இன்னும் அவரைப்பற்றிய பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது’  என்றார். கடந்த சில நாட்களாக மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வந்த இந்த விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. 

sanam

இந்நிலையில் தர்ஷன் சனம் ஷெட்டி வழக்கில்  தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தர்ஷன்  மீது  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பண மோசடி தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் தர்ஷன் தரப்பில் முன்ஜாமீன் கேட்டதாகவும், ஆனால்  அது மறுக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இதனால் தர்ஷன் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். முன்னதாக சனம்  ஷெட்டி வழக்கறிஞர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பண மோசடி போன்ற குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் . அதனால் தர்ஷனுக்கு 7 வருடம் வரை தண்டனை கிடைக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.