‘சந்நியாசியாகத் தான் இருப்பேன்’: ஷெரின் மீது ஏற்பட்ட அன்பினால் தர்ஷன் எடுத்த விபரீத முடிவு!
பிக் பாஸ் 3 யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் 3 யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்து எப்பவும் ஒரே சண்டை, சச்சரவாகவே செல்கின்றது. அதை பார்த்த ரசிகர்கள் எப்போ தான் இவர்களுக்கு டாஸ்க் கொடுப்பீர்கள் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு ஏற்றார் போல் நேற்று இந்த வாரத்திற்கான luxury பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. வனிதா மற்றும் முகன் கொலையாளியாக மாறி ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்று அறிவித்தனர்.
அறிவித்த படியே கொடுக்கப்பட்ட டாஸ்கை இருவரும் சரியாக செய்து சாக்ஷி மற்றும் மோகன் வைத்தாயாவை கொல்லை செய்து விட்டனர். இந்த நிலையில் அதற்கான தொடர்ச்சி இன்று மீண்டும் நடைபெறுகிறது. அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஷெரின் மற்றும் ரேஷ்மா கொலை செய்து விட்டது போல் உள்ளது.
#Day17 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/74QugWo2Il
— Vijay Television (@vijaytelevision) July 10, 2019
அப்போது தர்ஷன், ஷெரீனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார். அதில், ‘இந்த வீட்டிற்குள் நான் நுழையும் போதே, தேவதை போல் இருந்து என்னை வரவேற்றார். அந்த அழகை பார்த்ததும் இனிமேல் சாகிற வரை சன்னியாசியாகவே இருப்பேன் என்றும் ரொமான்ஸ் செய்வது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.