சந்தேகத்தால் இரண்டாவது மனைவியை அடித்து கொன்ற கணவன்!

 

சந்தேகத்தால் இரண்டாவது மனைவியை அடித்து கொன்ற கணவன்!

முதல் மனைவி  இறந்துவிட்ட நிலையில்   மயிலாத்தாள் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

நாமக்கல் அடுத்துள்ள பெரியபட்டி கதிர்வேல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பரமானந்தன். 60 வயதான இவர் லாரி ஓட்டுநராக உள்ளார். இவரின் முதல் மனைவி  இறந்துவிட்ட நிலையில்   மயிலாத்தாள் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. 

ttn

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் பரமானந்தன் அருகிலிருந்த கடையை எடுத்து மயிலாத்தாள் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ttn

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பரமானந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மனைவி மீது உள்ள சந்தேகத்தால் அடித்து கொன்றது தெரியவந்துள்ளது.