சந்திரயான் 2 விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை- கையை விரித்த நாசா

 

சந்திரயான் 2 விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை- கையை விரித்த நாசா

சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் 2வை கடந்த ஜூலையில் விண்ணில் ஏவியது இஸ்ரோ. திட்டமிட்டப்படி, சந்திரயான் 2 தனது பயணத்தை தொடர்ந்தது. முதலில் ஆர்ப்பிட்டரை நிலவின் சுற்று வட்டப்பாதையில் கழற்றி விடப்பட்டது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி அதிகாலையில் நிலவில் சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

நிலவின் மேற்பரப்பு

ஆனால் கடைசி நேரத்தில், நிலவின் மேற்பரப்பு மேல் 2.1 கி.மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும், 14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொண்டால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி விடலாம் என்ற வாய்ப்பும் இருந்தது. ஆனால் அதுவும் முடியாமல் போனது.

இந்த சூழ்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் எந்தபகுதியில் இறங்கியது மற்றும் அது இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாசா ஈடுபட்டது. நாசா தனது எல்.ஆர். ஆர்பிட்டரை இதற்காக பயன்படுத்தியது. அது எடுத்து அனுப்பிய படங்களை டிவிட்டரில் போஸ்ட் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலவில் சிம்பிலியஸ் என் மற்றும் மான்சினஸ்சி பள்ளங்களுக்கு இடையில் ஒரு சிறிய உயரமான சமவெளியில் விக்ரம் லேண்டர் இறங்க முயன்றது. கடினமாக தரையங்கியுள்ளது மற்றும் அதன் இருப்பிடம் இன்னும் துல்லியமாக தீர்மானிக்கப்படவில்லை.

நிலவில் விக்ரம் லேண்டர் இறங்க முயற்சி செய்த பகுதி

சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய பகுதியை எல்.ஆர். ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. அந்த படங்கள் மாலை நேரத்தில் எடுக்கப்பட்டது. விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் அக்டோபர் மாதத்தில் அந்த பகுதியில் ஆர்பிட்டர் பறக்கும்போது சாதகமான வெளிச்சத்தில் அதிக படங்கள் பிடிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளது.