சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதற்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது!

 

சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதற்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது!

90 சட்மன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராய்பூர்: 90 சட்மன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பினை கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் OP ராவத் அறிவித்தார்.

அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக இன்று 18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்ளிட்ட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சத்தீஸ்கரில் அடுத்த கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கு வருகின்ற 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.