சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இறுதி கட்ட வாக்குப்பதிவில் 71.93 சதவீத வாக்குகள் பதிவு

 

சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இறுதி கட்ட வாக்குப்பதிவில் 71.93 சதவீத வாக்குகள் பதிவு

சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவில் 71.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ராய்பூர்: சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவில் 64.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

இதனைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தின் 18 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 12-ம் தேதி முதல் கட்டமாகவும், எஞ்சிய 72 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக நவம்பர் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

அத்னபடி, நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில், 70 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், எஞ்சிய 72 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக நவம்பர் 20-ம் தேதி (இன்று) வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், மாலை 6 மணி நிலவரப்படி 71.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதாலும், பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்திருந்ததாலும் வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்புக்கு இடையே காலை முதல் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.