சத்தம் இல்லாமல் கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.15 லட்சம் வழங்கிய தல அஜீத்!!

 

சத்தம் இல்லாமல் கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.15 லட்சம் வழங்கிய தல அஜீத்!!

கஜா புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் அஜீத் ரூ.15லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்

சென்னை: கஜா புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் அஜீத் ரூ.15லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்டோர் புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுளனர்.

இதனிடையே, புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு சார்பில் ரூ.1000 கோடி மீட்பு பணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர் பழனிசாமி, புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.15,000 கோடி கோரியுள்ளார்.

அதேபோல், புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பால், அரிசி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள், போர்வை போன்ற அத்தியாவசிய உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள அதிகாரிகளையும் தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. அது தவிர, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் ஏராளமானோர் நிதி அளித்து வருகின்றனர்.

ajith

இந்நிலையில், கஜா புயல் நிவாரணமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், கஜா புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் அஜீத் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ள தகவல் இடம்பெற்றுள்ளது.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13.32 கோடி வந்துள்ளதாகவும், ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் இந்த தொகை பெறப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.