சண்முகராஜன் மீதான பாலியல் புகார்: 2 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற நாட்டாமை டீச்சர்!

 

சண்முகராஜன் மீதான பாலியல் புகார்: 2 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற நாட்டாமை டீச்சர்!

பிரபல நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி அளித்திருந்த பாலியல் புகாரை திரும்ப பெற்றுள்ளார்.

சென்னை: பிரபல நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி அளித்திருந்த பாலியல் புகாரை திரும்ப பெற்றுள்ளார்.

மி டூ இயக்கத்தால் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எங்கு திரும்பினாலும் பாலியல் குற்றச்சாட்டுகளால் நிரம்பி வழிகிறது சினிமா துறை. இதனால் பிரபலங்கள் பலரின், முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகிறது.

இது இப்படி இருக்க, பிரபல தொலைக்காட்சியின் முன்னணி சீரியலின் ஷூட்டிங்கின் போது நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாட்டாமை புகழ் நடிகை ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் சண்முகராஜன் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க நடிகை ராணி புகார் கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகர் சண்முகராஜனுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும், அவர் மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான பாலியல் புகாரை திரும்பப் பெறுகிறேன் என்றும் நடிகை ராணி தெரிவித்துள்ளார்.