சண்டையைத் தடுக்க சென்ற நபர்.. குடி போதையில் அடித்துக் கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

 

சண்டையைத் தடுக்க சென்ற நபர்.. குடி போதையில் அடித்துக் கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

சண்டையை தடுக்க சென்ற நபர் குடிபோதையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து குடும்ப பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக குடி போதையில் பல சண்டைகள் நடந்த வருகின்றன. குறிப்பாக டாஸ்மாக் திறக்கப்பட்டதால் பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் சண்டையை தடுக்க சென்ற நபர் குடிபோதையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு திருமங்கலம் என்னும் பகுதியில் வசிக்கும் பாபு மற்றும் பேபி என்னும் இருவர் நேற்று மதுக்கடைக்கு சென்றுள்ளனர். மது வாங்கி குடித்துக் கொண்டிருந்த அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால், அவர்களை விலக்கி விட விஜயன் (40) என்னும் தொழிலாளி வந்துள்ளார். அவர் அவர்களை விலக்க முயன்றதால் ஆத்திரமடைந்த அவர்கள், கீழே இருந்த கட்டையை எடுத்து பலமாக தாக்கியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த விஜயன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விஜயனை தாக்கிய பாபுவை போலீசார் பிடித்துள்ளனர். மேலும், மற்றொருவரை தேடி வருகின்றனர்.