சட்ட விரோத கருக்கலைப்பு: ஓய்வு பெற்ற அரசு சுகாதார இணை இயக்குநர் கைது!

 

சட்ட விரோத கருக்கலைப்பு: ஓய்வு பெற்ற அரசு சுகாதார இணை இயக்குநர் கைது!

மேட்டூரில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

சேலம்: மேட்டூரில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மருத்துவர் சந்திரா, அரசு சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் இணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் மேட்டூர் அரசு மருத்துவமனை அருகில் பிரசவ மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தார்.

இந்நிலையில் இங்கு சட்ட விரோத கருக்கலைப்பு மற்றும் ஸ்கேன் மூலம் பாலினத்தை தெரிவிப்பதாக அரசு மருத்துவதுறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மருத்துவ குழு கண்காணிப்பாளர் தலைமையில் அதிகாரிகள் ஸ்கேன் சென்டரில் சோதனை செய்தனர். இதில் சட்ட விரோத கருக்கலைப்பு மற்றும் ஸ்கேன் மூலம் பாலினம் தெரிவித்தல் ஆகிய குற்றங்கள் நடைபெற்று இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவர் சந்திராவை கைது செய்து  ஸ்கேன் சென்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.