சட்டீஸ்கரில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி

 

சட்டீஸ்கரில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி

சட்டீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக – காங் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ராய்பூர்: சட்டீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக – காங் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு நவம்பர் 12-ம் தேதியும், அடுத்தக்கட்டமாக 72 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதியும் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 74% வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. சட்டீஸ்கரில் பாஜக முதல்வர் ராமன் சிங் ஆட்சியை தக்க வைப்பார் என ஒரு கருத்து கணிப்பும், 15 ஆண்டுக்குப்பின் இங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என மற்றொரு கருத்துக் கணிப்பும் தெரிவித்துள்ளது. இதனால் இம்மாநிலத்தின் தேர்தல் முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதனால் பாஜகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் நேரம் செல்ல செல்ல மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.