சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் ஜே.கே.திரிபாதி

 

சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் ஜே.கே.திரிபாதி

தமிழகத்தின் 29-வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாகவும், தமிழக காவல்துறை தலைவராகவும்  ஜே.கே.திரிபாதி பொறுப்பேற்று கொண்டார். ஓய்வு பெற்றுள்ள டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அவரை கைகுலுக்கி வரவேற்றார். 

தமிழகத்தின் 29-வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாகவும், தமிழக காவல்துறை தலைவராகவும்  ஜே.கே.திரிபாதி பொறுப்பேற்று கொண்டார். ஓய்வு பெற்றுள்ள டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அவரை கைகுலுக்கி வரவேற்றார். 

இதைத்தொடர்ந்து திரிபாதி கையெழுத்திட்டு பொற்றுபேற்று கொண்டார். தற்போது  சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடந்து வருகிறது. 

இதில் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, தமிழக காவல்துறை நிர்வாக கூடுதல் டிஜிபி கந்தசாமி, காவல்துறை நலவாரிய கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், தலைமைக காவல்துறை கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.