சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பு
சட்டமன்ற தேர்தலையொட்டி நடிகை குஷ்பு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார்.
தெலுங்கானா: சட்டமன்ற தேர்தலையொட்டி நடிகை குஷ்பு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார்.
கடந்த 80கள் மற்றும் 90களில் தமிழ் திரையுலகை போலவே தெலுங்கு திரையுலகிலும் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பு. இவர் அங்கு முன்னணி நட்சத்திரங்களான தெலுங்கு நடிகர்கள் நாகார்ஜூனா, வெங்கடேஷ், ராஜேந்திரபிரசாத் போன்றவர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர். தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வரும் இவர் அரசியலுக்காக மீண்டும் தெலுங்கு பக்கம் திருப்பியுள்ளார்.
சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகரராவ் அமைச்சரவை சமீபத்தில் ராஜினாமா செய்ததால் அம்மாநிலத்தில் வரும் 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் கூட்டணி வைத்து தெலுங்கானாவில் போட்டியிடுகின்றன. இன்று தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.
Had the honour of meeting the H'ble CM of AP @ncbn gaaru while campaigning in Telangana..so privileged..thank you Sir for your valuable time. pic.twitter.com/68Gxf5TBTi
— Khushbu Sundar.. (BJPwaalon ab thoda araam karlo) (@khushsundar) December 4, 2018
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், பிரபல நடிகையுமான குஷ்பு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.