சட்டமன்ற தேர்தலில் ரஜினிக்கும், ஸ்டாலினுக்கும் இடையேதான் போட்டி: அர்ஜுன் சம்பத் உறுதி!

 

சட்டமன்ற தேர்தலில் ரஜினிக்கும், ஸ்டாலினுக்கும் இடையேதான் போட்டி: அர்ஜுன் சம்பத் உறுதி!

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

விருதுநகர்:  சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் முதல்வர் பதவிக்கான போட்டியாக இருக்கும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

arjun

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடுவார் . தேர்தலில் முதல்வர் பதவிக்கு ரஜினிக்கும் , ஸ்டாலினுக்கும் இடையேதான் போட்டியாக இருக்கும். அதில் ரஜினி வெற்றி பெற்று முதல்வராகப்  பதவியேற்பார்.  ராஜராஜசோழன் ஆட்சியை அவர் வழங்குவார்’ என்றார். 

rajini

தொடர்ந்து கமல் ஹாசன் குறித்து பேசிய அவர், கமல் ஹாசன் கொள்கை கம்யூனிஸ்ட் கொள்கை. அவரின் வாக்கு வங்கி நிலையானது அல்ல’ என்றும் விமர்சித்தார். மேலும் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி தனது முழு ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.