சட்டத்தை மீறும் ரசிகர்கள், நடவடிக்கை எடுப்பாரா சூர்யா? காத்திருப்போம்!

 

சட்டத்தை மீறும் ரசிகர்கள், நடவடிக்கை எடுப்பாரா சூர்யா? காத்திருப்போம்!

ஒரு பேச்சுக்கு பூம்புகார் மாதிரி கடல்கோளால் தமிழ்நாடு மண்ணோடு மண்ணாகுது, அதன்பின் ஒரு 2000 வருஷம் கழிச்சி கீழடியில நடக்குற தொல்பொருள் ஆராய்ச்ச்சி மாதிரி தமிழ்நாடு இருந்த இடத்தை தோண்டிப் பார்த்தாங்கன்னா, ‘மனித பரிணாமத்துலயே ரொம்ப கேவலமான தனிமனித துதி பாடுனது இந்தப் பயலுகளாதான் இருக்கும்”னு மண்ணை போட்டு மூடிட்டு போயிருவாங்க. ஏன்னா, அங்கங்க நம்ம சினிமா நடிகர்களோட கட்-அவுட் 500 அடிவரைக்கும் வச்சிருப்பாய்ங்க.

ஒரு பேச்சுக்கு பூம்புகார் மாதிரி கடல்கோளால் தமிழ்நாடு மண்ணோடு மண்ணாகுது, அதன்பின் ஒரு 2000 வருஷம் கழிச்சி கீழடியில நடக்குற தொல்பொருள் ஆராய்ச்ச்சி மாதிரி தமிழ்நாடு இருந்த இடத்தை தோண்டிப் பார்த்தாங்கன்னா, ‘மனித பரிணாமத்துலயே ரொம்ப கேவலமான தனிமனித துதி பாடுனது இந்தப் பயலுகளாதான் இருக்கும்”னு மண்ணை போட்டு மூடிட்டு போயிருவாங்க. ஏன்னா, அங்கங்க நம்ம சினிமா நடிகர்களோட கட்-அவுட் 500 அடிவரைக்கும் வச்சிருப்பாய்ங்க.

Surya CutOut

நீண்ட நாளுக்குப் பிறகு வாடகைக்குப்போகும் பெட்ரோமாக்ஸ் லைட் போல, சிலபல வருடங்களுக்குப் பிறகு சூர்யாவுக்கு ஹிட் அடிக்க வாய்ப்பிருக்கும் படம் என்.ஜி.கே., மே 31ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. விஜய் அஜீத் ரசிகர்களுக்கு தங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் ஒன்று இல்லாவிட்டாலும் அடுத்தது ஹிட்டடிப்பதால், அவர்கள் கொண்டாட்டத்துக்கு அவ்வப்போது தீனி கிடைக்கிறது. பாவம் சூர்யா ரசிகர்கள் செம்பரம்பாக்கம் ஏரிபோல நீண்ட வருடங்களாக காய்ந்துபோய் கிடக்கிறார்கள். அவர்களுடைய கொண்டாட்டத்திற்கு தீனியாக வரும் என்.ஜி.கேவை கொண்டாடி தீர்க்க முடிவு செய்தவர்கள், சூர்யாவுக்கு 215 அடிக்கு கட் அவுட் வைத்திருக்கிறார்கள். அந்த கட்-அவுட்டுக்கு இன்று, மே 30ஆம் தேதி திறப்பு விழா வேறு கொண்டாடுகிறார்கள்.

Surya NGK

தமிழ்நாட்டின் வட எல்லையும், தமிழகத்திலேயே வெயில் காட்டு காட்டென காட்டும் ஊர்களில் ஒன்றான, திருத்தணியில்தான் இந்த ஏற்பாடு. உயிரோடு இருப்பவர்களின் கட்-அவுட்களை வைப்பதற்கு ஏற்கெனவே உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அரசியல்வாதிகளே அதனை மதித்து நடக்கும்போது, இந்த சில்வண்டுகள் இம்சை தாங்கவில்லை. கட்-அவுட்டுக்கு பால் ஊத்துகிறேன் என்று தங்களுக்கே பால் ஊற்றிக்கொண்டவர்கள் கதை இன்னும் எத்தனை வருடங்களுக்கு தொடரப்போகிறதோ? வழக்கமாக இந்தமாதிரி அசட்டுத்தனங்களை ஊக்குவிக்காதவரான சூர்யா இதற்கு ஏதேனும் உருப்படியாக செய்வார் என நம்புவோம்!