சட்டக்கல்லூரி மாணவரின் சண்டித்தனம்- காதல் “Break -up” ஆனதால் காதலியை “Pack -up” பண்ண கொல்ல முயற்சி …

 

சட்டக்கல்லூரி மாணவரின் சண்டித்தனம்- காதல் “Break -up” ஆனதால் காதலியை “Pack -up” பண்ண கொல்ல முயற்சி …

பெங்களூருவில் ,நகர்பவி பகுதியில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் ஒரு 19 வயது மாணவியை அக்கல்லூரியில் பயின்ற ஒரு முன்னாள் மாணவர் ரோஷன் B .சிங் துன்புறுத்துவதாகவும் ,கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அப்பெண் கொடுத்த புகாரில் போலீசார் சிங்கை கைது செய்தனர்.

பெங்களூருவில், நகர்பவி பகுதியில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் ஒரு 19 வயது மாணவியை அக்கல்லூரியில் பயின்ற ஒரு முன்னாள் மாணவர் ரோஷன் B .சிங் துன்புறுத்துவதாகவும், கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அப்பெண் கொடுத்த புகாரில் போலீசார் சிங்கை கைது செய்தனர்.

arrest

போலீஸ் அறிக்கைப்படி, அப்பெண்ணும் சிங்  என்ற முன்னாள் மாணவரும்  பல மாதங்களாக காதலித்து வந்ததாகவும், அந்த வாலிபர் அப்பெண் மீது திடீரென அதிகமாக சந்தேகப்பட்டதால் அப்பெண் அவரை விட்டு விலகிச்செல்ல ஆரம்பித்தார். திடீரென அப்பெண் தன்னை விட்டு விலகியதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் அப்பெண் கல்லூரிக்கு போகும்போதும் வரும்போதும் வழியில் மடக்கி துன்புறுத்தியதாகவும், கழுத்தை நெரித்து கொள்ள முயற்சிப்பதாகவும் புகார் தெரிவித்தார். அவர் இப்படி பலமுறை தன்னை மீண்டும் காதலிக்க சொல்லி கொடுமை படுத்தியதால் தான் ஏற்கனவே தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் அவர் கூறினார். இதனால் போலீசார் அந்த சிங் என்ற முன்னாள் கல்லூரி மாணவர் மீது IPC பிரிவு 354A, 307, 323, 341, 354Dஆகிய  பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர் .