சச்சினோடு Selfie எடுக்கலாம் , பேட்டிங் பண்ணலாம் – அவருக்கு No பாதுகாப்பு – முதல்வர் மகனுக்கு”Z “பாதுகாப்பு.

 

சச்சினோடு Selfie எடுக்கலாம் , பேட்டிங் பண்ணலாம் – அவருக்கு No பாதுகாப்பு – முதல்வர் மகனுக்கு”Z “பாதுகாப்பு.

சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.முதல்வர் மகன் ஆதித்யா தாக்கரேக்கு  இசட் வகை பாதுகாப்பு வழகப்பட்டது .
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது, அதே நேரத்தில் சிவசேனா எம்.எல்.ஏ ஆதித்யா தாக்கரே ‘இசட்’ வகை பாதுகாப்புக்கு  உயர்த்தப்பட்டதாக பி.டி.ஐ அதிகாரிகள் கூறியுள்ளனர் . மகாராஷ்டிரா அரசாங்கத்தின்  ஆய்வுக்குப் பிறகு  பாதுகாப்பு மாற்றங்கள் செய்யப்பட்டன.

சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.முதல்வர் மகன் ஆதித்யா தாக்கரேக்கு  இசட் வகை பாதுகாப்பு வழகப்பட்டது .
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது, அதே நேரத்தில் சிவசேனா எம்.எல்.ஏ ஆதித்யா தாக்கரே ‘இசட்’ வகை பாதுகாப்புக்கு  உயர்த்தப்பட்டதாக பி.டி.ஐ அதிகாரிகள் கூறியுள்ளனர் . மகாராஷ்டிரா அரசாங்கத்தின்  ஆய்வுக்குப் பிறகு  பாதுகாப்பு மாற்றங்கள் செய்யப்பட்டன.

sachin-tendukar

90 க்கும் மேற்பட்ட முக்கிய குடிமக்களின்  பாதுகாப்பு மகாராஷ்டிரா அரசாங்கக் குழுவால் அண்மையில் நடந்த கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இப்போது வரை, பாரத் ரத்னா விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் வகை பாதுகாப்பை பெற்று  வருகிறார். எக்ஸ் பிரிவின் கீழ், ஒரு போலீஸ்காரரை  46 வயதான கிரிக்கெட் வீரர் சச்சின்   எல்லா நேரங்களிலும் பாதுகாப்புக்கு  வைத்திருந்தார். எவ்வாறாயினும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தனது வீட்டை விட்டு வெளியே போகும்போதெல்லாம் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

Adithya-thackerey

முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரேக்கு ‘இசட்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அதாவது இப்போது அதிகமான பாதுகாவலர்கள்  அவருக்கு காவல் காப்பார்கள்  என்று அந்த அதிகாரி கூறினார். இதற்கு முன்னதாக, மத்திய மும்பையில் வொர்லியைச் சேர்ந்த 29 வயதான எம்.எல்.ஏ., ஒய் +  பாதுகாப்பு பெற்றிருந்தார்.