சசிகுமார் படத்தில் வில்லியாக நடிக்கும் பிரபல சின்னதிரை நாயகி

 

சசிகுமார் படத்தில் வில்லியாக நடிக்கும் பிரபல சின்னதிரை நாயகி

நடிகை வித்யா பிரதீப், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் வில்லியாக நடிக்கவுள்ளார்.

சென்னை: நடிகை வித்யா பிரதீப், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் வில்லியாக நடிக்கவுள்ளார்.

சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர் நடிகை வித்யா பிரதீப். அதில் தனது எதார்த்த நடிப்பு மூலம் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து பசங்க 2, அதிபர், அச்சமின்றி, களரி, இரவுக்கு ஆயிரம் கணகள், மாரி 2, தடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி தொடரிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தடம்  படத்தில், போலீஸ் அதிகாரியாகச் சிறப்பாக நடித்ததன் மூலம் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது.

vithya

அதன்படி, இயக்குநர் கிருஷ்ணகுமார் இயக்கவுள்ள புதிய படத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நெகட்டிவ் ரோல் ஒன்றுக்காக நடிகையை தேடி வந்துள்ளனர். அப்போது ‘தடம்’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த கோபிநாத், அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்த வித்யா பிரதீப்பை பரிந்துரை செய்துள்ளார். அதன்பின்னர் ‘தடம்’ படத்தை பார்த்த இயக்குனர் கிருஷ்ணகுமார், தனது படத்திற்கு வித்யா பிரதீப் பொருத்தமாக இருப்பார் என கருதி அவரையே ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.